Posts

பிரிவின் வலி.

Image
மண்ணில் சங்கமித்த மழைத்துளியாய், நீங்கா நினைவுகளாய் நித்தமும் பொழிகிறாய், காய்ந்தும் கருகின்றேன், கவலையில் வாடுகின்றேன், வெந்தனல் புண்ணாகி ஆறாக் காயங்களில், நித்தமும் கரையும் கண்ணீரை விட்டு ஆற்றிக் கொண்டிருக்கின்றேன், நீயும் வரப் போவதில்லை, காயங்களும் ஆறப் போவதில்லை, உலகமும் ஒத்துபோவதில்லை,.. எவர்க்கும் நியாயம் கிடைக்க போவதில்லை, எனக்கு மட்டும் என்ன விதி விலக்கா, என்ன இப்பூமியில் வாழ்ந்த வாழ்க்கை போதும், கல்லறை வாசம் என்னுள் வீச தென்றலோடு நலம் விசாரிக்கின்றேன், என்னையும் உன் விருந்தாளியாய் என்னையும் ஏற்றுக் கொள் என்று.. நிராகரிக்குமோ இல்லை ஏற்றுக்கொள்ளுமோ, வழிகளிலும் வீசும் இடங்களிலும் காத்து கொண்டிருக்கின்றேன்..!!

காதல்

Image
உன்னை மறந்துவிட்டேன்... உன் நினைவை துறந்துவிட்டேன்... உன் ஞாபகமே இல்லை.... உன்னைத்தவிர எல்லாமே நினைவில் உள்ளது.... நன்றாக தூக்கம் வருகிறது நன்றாக உணவு உண்கிறேன் எல்லோருடனும் சகஜமாக இருக்கிறேன்.... தனியாக இருப்பினும் உன் நினைவின்றி இருக்கிறேன்..... கூட்டத்தில் இருப்பின் மகிழ்ச்சியாக இருக்கிறேன்... உன்னைத்தவிர எல்லாமே பிடிக்கிறது... கவிதையில் உன்னைப்பற்றி எழுதிட தோன்றவே இல்லை... இசையில் கூட உன் மெளனம் இருப்பதில்லை.... தூக்கத்தில் உன் கனவுகள்  வருவதில்லை..... . . . . இப்போதுதான் நான்.... நானாக இருக்கிறேன்.... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . இப்படி எல்லாம் சொல்லிவிட துடிக்கிறது முடியவில்லை.....! என்னவளின் நினைவுகளை சேமிக்கிறேன்..!!