பிரிவின் வலி.
மண்ணில் சங்கமித்த மழைத்துளியாய், நீங்கா நினைவுகளாய் நித்தமும் பொழிகிறாய், காய்ந்தும் கருகின்றேன், கவலையில் வாடுகின்றேன், வெந்தனல் புண்ணாகி ஆறாக் காயங்களில், நித்தமும் கரையும் கண்ணீரை விட்டு ஆற்றிக் கொண்டிருக்கின்றேன், நீயும் வரப் போவதில்லை, காயங்களும் ஆறப் போவதில்லை, உலகமும் ஒத்துபோவதில்லை,.. எவர்க்கும் நியாயம் கிடைக்க போவதில்லை, எனக்கு மட்டும் என்ன விதி விலக்கா, என்ன இப்பூமியில் வாழ்ந்த வாழ்க்கை போதும், கல்லறை வாசம் என்னுள் வீச தென்றலோடு நலம் விசாரிக்கின்றேன், என்னையும் உன் விருந்தாளியாய் என்னையும் ஏற்றுக் கொள் என்று.. நிராகரிக்குமோ இல்லை ஏற்றுக்கொள்ளுமோ, வழிகளிலும் வீசும் இடங்களிலும் காத்து கொண்டிருக்கின்றேன்..!!